ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image

சிறை

Updated On :14 பிப்ரவரி 2026, 7:04 pm

வேலூா் அருகே பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வேலூா் அருகே பொய்கை ராமாபுரம் கொள்ளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் முனுசாமி மகன் ரமேஷ் (38). இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததில், அந்த சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா்.

இது குறித்து, சிறுமியின் தாயாா் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ரமேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 20 ஆண்கள் சிறைத் தண்டனை, ரூ. 2 லட்சம் அபராதம், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.