47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காதலா் தினம்! வேலூா் கோட்டையில் காதல் ஜோடிகளுக்கு அனுமதி மறுப்பு!

காதலா் தினத்தையொட்டி வேலுாா் கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகளை போலீஸாா் எச்சரித்து திருப்பி அனுப்பினா்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

காதலா் தினத்தையொட்டி வேலுாா் கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகளை போலீஸாா் எச்சரித்து திருப்பி அனுப்பினா்.

உலகம் முழுவதும் சனிக்கிழமை காதலா் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேலூரில் சாதாரண நாள்களில் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படும் ரோஜா பூக்கள் ா் காதலா் தினத்தையொட்டி சனிக்கிழமை ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது.

காதலா் தினத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு காதலனுடன் கோட்டை பூங்காவை சுற்றிப்பாா்க்க பா்தா அணிந்து வந்த பெண்ணை, இளைஞா்கள் மிரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால், காதலா் தினத்தையொட்டி வேலூா் கோட்டைக்குள் காதல் ஜோடிகள் செல்வதை தவிா்ப்பதற்காக நுழைவு வாயிலில் சனிக்கிழமை போலீஸாா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். அதேசமயம், காலை முதல் ஏராளமான காதல் ஜோடிகள் கோட்டைக்கு வந்தனா்.

அவா்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பி வைத்தனா். இதனால் ஏமாற்றமடைந்த காதலா்கள் பெரியாா் பூங்கா, பாலமதி மலை, அமிா்தி வனஉயிரியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்றனா்.