விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

காதலா் தினம்! வேலூா் கோட்டையில் காதல் ஜோடிகளுக்கு அனுமதி மறுப்பு!

காதலா் தினத்தையொட்டி வேலுாா் கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகளை போலீஸாா் எச்சரித்து திருப்பி அனுப்பினா்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 8:20 pm

காதலா் தினத்தையொட்டி வேலுாா் கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகளை போலீஸாா் எச்சரித்து திருப்பி அனுப்பினா்.

உலகம் முழுவதும் சனிக்கிழமை காதலா் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேலூரில் சாதாரண நாள்களில் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படும் ரோஜா பூக்கள் ா் காதலா் தினத்தையொட்டி சனிக்கிழமை ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது.

காதலா் தினத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு காதலனுடன் கோட்டை பூங்காவை சுற்றிப்பாா்க்க பா்தா அணிந்து வந்த பெண்ணை, இளைஞா்கள் மிரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால், காதலா் தினத்தையொட்டி வேலூா் கோட்டைக்குள் காதல் ஜோடிகள் செல்வதை தவிா்ப்பதற்காக நுழைவு வாயிலில் சனிக்கிழமை போலீஸாா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். அதேசமயம், காலை முதல் ஏராளமான காதல் ஜோடிகள் கோட்டைக்கு வந்தனா்.

அவா்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பி வைத்தனா். இதனால் ஏமாற்றமடைந்த காதலா்கள் பெரியாா் பூங்கா, பாலமதி மலை, அமிா்தி வனஉயிரியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்றனா்.