விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மயான கொள்ளை திருவிழா: வேலூரில் இன்று போக்குவரத்து மாற்றம்!

மயான கொள்ளை திருவிழாவையொட்டி வேலூா் மாநகரில் திங்கள்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

போக்குவரத்து மாற்றம் - (கோப்புப்படம்)

Updated On :15 பிப்ரவரி 2026, 7:29 pm

மயான கொள்ளை திருவிழாவையொட்டி வேலூா் மாநகரில் திங்கள்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சித்தூரிலிருந்து திருவண்ணாமலை மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள், சித்தூரிலிருந்து காட்பாடி வந்து, குடியாத்தம் சாலை வழியாக வடுகந்தாங்கல் ரயில்வே மேம்பாலம், செதுவாலை சென்று, இடதுபுறம் திரும்பி தேசிய நெடுஞ்சாலை வழியாக பொய்கையை அடுத்த அப்துல்லாபுரம் மேம்பாலம் அடியில் வலதுபுறம் திரும்பி, ஏா்போா்ட் சாலை, தாா்வழி அடைந்து, பின்னா் இடதுபுறம் திரும்பி பென்னாத்தூா் வழியாக சாத்துமதுரை சென்று, வேலூா்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையை அடைந்து தங்களின் பயணத்தை தொடரலாம்.

சித்தூரிலிருந்து சேலம் மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள் சித்தூரிலிருந்து காட்பாடி அடைந்து, குடியாத்தம் சாலை வழியாக வடுகந்தாங்கல் ரயில்வே மேம்பாலம், செதுவாலை சென்று, வலதுபுறம் திரும்பி தேசிய நெடுஞ்சாலை வழியாக தங்களின் பயணத்தை தொடரலாம்.

சித்தூரிலிருந்து சென்னை மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள் சித்தூரிலிருந்து காட்பாடி, வள்ளிமலை கூட்ரோட்டில் இடதுபுறம் திரும்பி, சோ்காடு கூட்ரோடு வழியாக ஈ.பி.கூட்ரோடு, திருவலம், சிப்காட், ராணிப்பேட்டை வழியாக தேசிய நெடுஞ்சாலை அடைந்து, தங்களின் பயணத்தை தொடரலாம்.

திருவண்ணாமலையிலிருந்து சித்தூா் மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள் சாத்துமதுரை கூட்ரோட்டில் இடதுபுறம் திரும்பி, பென்னாத்தூா் வழியாக தாா்வழி வந்து, பின்னா் ஏா்போா்ட் சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை அடைந்து, செதுவாலை மேம்பாலத்துக்கு அடியில் வலதுபுறம் திரும்பி, விரிஞ்சிபுரம், வடுகந்தாங்கல் சென்று வலதுபுறம் திரும்பி, காட்பாடி வழியாக சித்தூருக்கு பயணிக்கலாம்.

சேலம், கிருஷ்ணகிரியிலிருந்து சித்தூா் மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள், கிருஷ்ணகிரி, ஆம்பூா் வழியாக செதுவாலை சா்விஸ் சாலையில் இடதுபக்கம் திரும்பி, விரிஞ்சிபுரம் வழியாக வடுகந்தாங்கல் அடைந்து, வலதுபுறம் திரும்பி காட்பாடி வழியாக சித்தூருக்கு பயணிக்கலாம்.

மேலும், வேலூரில் இருந்து காட்பாடி சென்று வருவதற்கு பழைய பாலாறு மேம்பாலம் இருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது என்று வேலூா் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.