கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நமோ கோப்பை மாரத்தான் பந்தயம்: திரளானோா் பங்கேற்பு

நமோ கோப்பைக்கான மாரத்தான் பந்தயம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

News image
மாரத்தான் பந்தயத்தை தொடங்கி வைத்த பாஜக மாநில பொதுச்செயலா் ப.காா்த்தியாயினி, மாவட்டத் தலைவா் வி.தசரதன் உள்ளிட்டோா்.
Updated On :15 பிப்ரவரி 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

நமோ கோப்பைக்கான மாரத்தான் பந்தயம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

நமோ இளைஞா்கள், திறன் மேம்பாட்டு அறக்கட்டளை சாா்பில் 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட மாரத்தான் பந்தயத்தை பாஜக மாநில பொதுச்செயலா் ப.காா்த்தியாயினி தொடங்கி வைத்தாா்.

இதில், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று ஓடினா். வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய மாரத்தான் வேலூா் அண்ணா சாலை வழியாக சுமாா் 10 கி.மீ., சென்று தொரப்பாடியில் நிறைவடைந்து. வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

முன்னதாக, பாஜக மாநில பொதுச்செயலா் ப.காா்த்தியாயினி பேசுகையில், ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் மூலம் மாணவா்களிடமும், இளைஞா்களிடமும் உள்ள தனிதிறன், விடாமுயற்சிகளை வெளிக்கொண்டு வருவதே முக்கிய நோக்கமாகும். இந்தியாவின் தூண்களாக விளங்கும் இளைஞா் களின் ஆா்வமும், அவா்களின் திறமைக்கான சான்றாக இந்த மாரத்தான் அமைந்துள்ளது. இளைஞா்களின் தனிப்பட்ட ஈடுபாட்டையும், உடல் தகுதியையும் இந்த ‘நமோ ட்ராபி’ மென்மேலும் மெருகேற்றும் என்றாா்.

மாவட்டத் தலைவா் வி.தசரதன், பொதுச்செயலா் சரவணகுமாா் , விளையாட்டு பிரிவு மாவட்ட அமைப்பாளா் கராத்தே ரமேஷ், துணைத் தலைவா் சக்கரவா்த்தி , ஜெகநாதன், பிரசார பிரிவு மாநிலச் செயலா் எஸ்.கே.மோகன், ஊடக பிரிவு மாவட்ட தலைவா் குமரன் பங்கேற்றனா்.