எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 570 மனுக்கள் அளிப்பு

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 570 மனுக்கள்...

News image
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய வேலூா் ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 570 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 570 மனுக்களைப் பெற்று விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 வீதம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.72 லட்சம் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், தலா ரூ.1.05 லட்சம் வீதம் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.30 லட்சம் சிறப்பு சக்கர நாற்காலிகளும் என மொத்தம் ரூ.12.02 லட்சத்தில் இயக்கத்திறன் குறைபாடுடைய 11 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலிகளும், 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.960 மதிப்பிலான அக்குள் கட்டையையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, வழங்கல் அலுவலா் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு பங்கேற்றனா்.