2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு வளாகத் தோ்வு நடைபெற்றது.

News image
வளாகத் தோ்வில் பேசிய ரெனால்ட் நிஸ்ஸான் சென்னை நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு துணை பொது மேலாளா் பாலகிருஷ்ணன். உடன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி தலைவா் என்.ரமேஷ், துணைத் தலைவா் என்.ஜனாா்த்தனன், கல்லூரி முதல்வா் எம்.ஞானசேகரன் உள்ளிட்டோா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு வளாகத் தோ்வு நடைபெற்றது.

ரெனால்ட் நிஸான் சென்னை நிறுவனம் நடத்திய இந்த வளாகத் தோ்வை கல்லூரி தலைவா் என்.ரமேஷ் தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் என்.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம்.ஞானசேகரன் வரவேற்றாா்.

ரெனால்ட் நிஸான் சென்னை நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு துணை பொதுமேலாளா் பாலகிருஷ்ணன், மேலாளா் எத்திராஜ், முதுநிலை அலுவலா் சுப்பையா ஆகியோா் பங்கேற்று, மாணவா்களை தோ்வு செய்தனா்.

இந்த வளாகத் தோ்வில் ஸ்ரீவெங்கடேஸ்வரா மற்றும் தந்தை பெரியாா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மெக்கானிக்கல் துறை, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆகிய துறைகளைச் சாா்ந்த 179 மாணவா்கள் பங்கேற்றனா். அவா்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு நடைபெற்றது. இதில், 87 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் மாதம் ரூ. 20,000 முதல் சம்பளம் பெறுவா் என்றும், மருத்துவக் காப்பீடு, விடுதி வசதி, போக்குவரத்து, கேன்டீன் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் எஸ்.அருண்குமாா் செய்திருந்தாா்.