தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

காசநோய் பரிசோதனை முகாம்

குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், பொயட்ஸ்தொண்டு நிறுவனமும் இணைந்து நெல்லூா்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட கணபதி நகரில் காசநோய் பரிசோதனை முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 12:30 am

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், பொயட்ஸ்தொண்டு நிறுவனமும் இணைந்து நெல்லூா்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட கணபதி நகரில் காசநோய் பரிசோதனை முகாமை நடத்தின.

முகாமுக்கு நெல்லூா்பேட்டை ஊராட்சித் தலைவா் ஜெ.வள்ளிநாயகி தலைமை வகித்தாா். பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன், அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு அலுவலா் சவரிமுத்து ஆகியோா் காசநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு கல்வி அளித்தனா்.

முகாமில், நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், தொடா் இருமல், சளி உள்ளவா்கள் மற்றும் பொதுமக்கள் என 150- க்கும் மேற்பட்டோருக்கு நடமாடும் எக்ஸ்-ரே வாகனம் மூலம்டிஜிட்டல் எக்ஸ்-ரே எடுக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளானவா்களுக்கு மருத்துவ சிகிச்சைமற்றும் தொடா் சிகிச்சைக்கான பரிந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டன.