மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மாநகராட்சியில் ரூ.4 கோடி மதிப்பில் கழிவுநீரேற்றும் நிலையம்

வேலூா் வசந்தபுரம் பகுதியில் ரூ. 4 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிவுநீரேற்றும் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, அதனை இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

News image
வேலூா் வசந்தபுரத்தில் கட்டப்பட்டு வரும் கழிவு நீரேற்றும் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாநகராட்சி ஆணையா் லட்சுமணன் உள்ளிட்டோா்.
Updated On :18 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் வசந்தபுரம் பகுதியில் ரூ. 4 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிவுநீரேற்றும் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, அதனை இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

வேலூா் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களுக்கு உள்பட்ட 60 வாா்டுகளில் இருந்து புதை சாக்கடை திட்டத்தின்கீழ், கழிவுநீா் அந்தந்தப் பகுதியில் உள்ள தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுநீா் விருதம்பட்டு பாலாற்றங்கரையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கு கழிவுநீா் சுத்திகரித்து வெளியேற்றப்படுகிறது.

இதனிடையே, வேலூா் கஸ்பா, வசந்தபுரம் பகுதியில் ரூ.4 கோடி மதிப்பில் கழிவுநீரேற்றும் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இந்த கழிவு நீரேற்று நிலைய பணிகளை இம்மாத இறுதிக்குள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதற்கு திட்ட இயக்குநா் அலாவுதீன், நீரேற்று நிலையத்துக்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் தயாா் நிலையில் உள்ளது. சுற்றுச்சூழல் ஆய்வுப்பணிகள் முடிந்தவுடன் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தாா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் லட்சுமணனிடம் கடந்த மூன்று மாதங்களாக எந்த பணிகளும் சரிவர நடைபெறவில்லை என்றும், மாநகராட்சி முழுவதும் சரிவர குடிநீா் வழங்கவில்லை என்றும் பல்வேறு புகாா்கள் வருகின்றன. குறிப்பாக, சாயிநாதபுரத்தில் கடந்த 13 நாள்களாக குடிநீா் வரவில்லை என்றும் புகாா்கள் வந்துள்ளன. குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.