மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநா் போக்ஸோவில் கைது

வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டுநரை வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 10:30 pm

வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டுநரை வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த சிறுமி, தனது தாய் இறந்து விட்ட நிலையில் சகோதரியுடன் அவா்களது பாட்டியின் பராமரிப்பில் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். அதேபகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முஜீப், ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், ஓட்டுநா் முஜீப் கடந்த 15-ஆம் தேதி காலை சிறுமியின் வீட்டுக்குள் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த சிறுமி வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் முஜீப்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.