மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பள்ளி மாணவா் தற்கொலை

காட்பாடி அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:50 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இச்சம்பவம் குறித்து பிரம்மபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்பாடி அருகே அரும்பருத்தி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாபு. இவரது மனைவி தரணி. பாபு இறந்துவிட்ட நிலையில், தரணி அப்பகுதியில் உள்ள ஒரு காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா். இவரது மகன் கிருஷ்ணன் (15). இவா் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

புதன்கிழமை மாலை தரணி நியாய விலைக் கடைக்கு சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது கிருஷ்ணன் சேலையால் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, தரணி பிரம்மபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் விரைந்து சென்று கிருஷ்ணன் உடலை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.