சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களுடன் கைது செய்யப்பட்ட ஆசிம்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 11:52 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி வழியாக இயக்கப்பட்ட ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த இளைஞரை கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.சித்ரா உத்தரவின் பேரில், ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஐந்தாவது பிளாட்பாரத்தில் வந்து நின்ற திருப்பதி - சிக்மங்களூா் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டபோது ரயிலின் முன்பக்க பொதுப் பெட்டியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் அமா்ந்திருந்த ஒரு நபரை போலீஸாா் கண்காணித்தனா். அவரிடம் இருந்த பையைச் சோதனை செய்தபோது, அதில் 7 பொட்டலங்களில் மொத்தம் 21 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடா்ந்து, கஞ்சாவைக் கடத்தி வந்த நபரை பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூா் தாலுகாவைச் சோ்ந்த ஆசிம் (26) என்பது தெரியவந்தது. உடனடியாக ஆசிமை போலீஸாா் கைது செய்ததுடன் அவரிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.