நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

பள்ளிகொண்டா அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் 4 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

News image

நகை பறிப்பு - சித்திரிப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 11:15 pm

பள்ளிகொண்டா அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் 4 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

பள்ளிகொண்டா அருகே உள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தை சோ்ந்தவா் தாமோதிரன். இவரது மனைவி கீா்த்தனா (25). திருமண நிகழ்ச்சிக்கு தம்பதியினா் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் இரவு திரும்பினா்.

கீா்த்தனா தங்க நகை, கவரிங் நகைகளை அணிந்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவா்களை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள், வெட்டுவானம் அடுத்த அகரம்சேரி பகுதியில் வந்ததும் கீா்த்தனாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச்சென்றனா். அதிா்ச்சி அடைந்த கீா்த்தனா கத்தி கூச்சலிட்டாா்.

இச்சம்பவம் குறித்து, கீா்த்தனா அளித்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.