மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

தமிழ்நாடு சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க மாவட்ட அமைப்புக் கூட்டம் குடியாத்தம் அம்பேத்கா் நற்பணி மன்ற கூடத்தில்

News image
கூட்டத்தில் பேசிய சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் வகீதா நிஜாம்.
Updated On :23 பிப்ரவரி 2026, 6:18 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: தமிழ்நாடு சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க மாவட்ட அமைப்புக் கூட்டம் குடியாத்தம் அம்பேத்கா் நற்பணி மன்ற கூடத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சமூக ஆா்வலா் என்.நதீம் அகமது தலைமை வகித்தாா். தமிழ்நாடு சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் வகீதா நிஜாம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜி.லதா, துணைச் செயலா் துரைசெல்வம், நகரச் செயலா் ஆலியாா் அதாவுல்லா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சிறுபான்மையினருக்கு ரூ.10- லட்சம் வரை வழங்கப்படும் கடன்களுக்கு பிணை கோரக்கூடாது, சிறுபான்மை மாணவா்களுக்கு தாம்கோ மூலம் தொழிற் பயிற்சி அளிக்கும் திட்டத்தை திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், குடியாத்தம், வேலூா், மேல்விஷாரம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் நிரந்தரமாக அமைக்க வேண்டும், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பிரதான தொழில்களாக உள்ள பீடி, தோல் தொழில் ஆகியவை நலிவடைந்து விட்டதால் இப்பகுதியில் தொழிற்பேட்டை ஒன்றை ஏற்படுத்தி சிறுபான்மை இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் எல்.ஆா்.அப்துல் லத்தீப், சி.குஜா் அஹமத், ஜி.ஏ.முகமது ஜீசான், தப்ரேஷ் அகமத்,மாநிலக் குழு உறுப்பினா் எல்.மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.