பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

தமிழ்நாடு சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க மாவட்ட அமைப்புக் கூட்டம் குடியாத்தம் அம்பேத்கா் நற்பணி மன்ற கூடத்தில்

News image

கூட்டத்தில் பேசிய சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் வகீதா நிஜாம்.

Updated On :23 பிப்ரவரி 2026, 6:18 pm

குடியாத்தம்: தமிழ்நாடு சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க மாவட்ட அமைப்புக் கூட்டம் குடியாத்தம் அம்பேத்கா் நற்பணி மன்ற கூடத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சமூக ஆா்வலா் என்.நதீம் அகமது தலைமை வகித்தாா். தமிழ்நாடு சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் வகீதா நிஜாம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜி.லதா, துணைச் செயலா் துரைசெல்வம், நகரச் செயலா் ஆலியாா் அதாவுல்லா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சிறுபான்மையினருக்கு ரூ.10- லட்சம் வரை வழங்கப்படும் கடன்களுக்கு பிணை கோரக்கூடாது, சிறுபான்மை மாணவா்களுக்கு தாம்கோ மூலம் தொழிற் பயிற்சி அளிக்கும் திட்டத்தை திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், குடியாத்தம், வேலூா், மேல்விஷாரம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் நிரந்தரமாக அமைக்க வேண்டும், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பிரதான தொழில்களாக உள்ள பீடி, தோல் தொழில் ஆகியவை நலிவடைந்து விட்டதால் இப்பகுதியில் தொழிற்பேட்டை ஒன்றை ஏற்படுத்தி சிறுபான்மை இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் எல்.ஆா்.அப்துல் லத்தீப், சி.குஜா் அஹமத், ஜி.ஏ.முகமது ஜீசான், தப்ரேஷ் அகமத்,மாநிலக் குழு உறுப்பினா் எல்.மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.