டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முதல் தேசியக் கொடியை உருவாக்கிய குடியாத்தத்தில் 100 அடி உயர கம்பம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று தில்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி குடியாத்தம் நகரில் தயாரிக்கப்பட்டது என்ற பெருமையைபோற்றும் வகையில், 100 அடி உயர கொடி கம்பம் அமைத்து, அதில் தேசியக் கொடியை ஏற்ற நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

News image
கூட்டத்தில் சத்துணவு சமையலா் உதவியாளா்களுக்கு பணி ஆணை வழங்கிய நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்.
Updated On :27 பிப்ரவரி 2026, 5:57 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று தில்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி குடியாத்தம் நகரில் தயாரிக்கப்பட்டது என்ற பெருமையைபோற்றும் வகையில், 100 அடி உயர கொடி கம்பம் அமைத்து, அதில் தேசியக் கொடியை ஏற்ற நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

குடியாத்தம் நகா்மன்றத்தின் அவரசக் கூட்டம் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில்வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி மேலாளா் சுகந்தி, நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா். 15.8.1947- அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தில்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி குடியாத்தம் நகரில் தயாரிக்கப்பட்டது. இந்த வரலாற்றுப் பெருமையைபோற்றும் வகையில், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே நினைவுத்தூண் மற்றும் அலங்கார வளைவு அமைத்து அங்கு 100 அடி உயர கொடி கம்பம் உருவாக்கி அதில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் தீா்மானத்தை தலைவா் செளந்தரராஜன் முன் மொழிந்தாா். அதேபோல், சந்தப்பேட்டை பஜாரில் தற்போதுள்ள நேதாஜி சிலையின் பீடத்தை உயா்த்தி, சிலை வளாகத்தை புனரமைத்து அங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை வைக்கவும் மற்றொரு தீா்மானத்தை முன் மொழிந்தாா். அனைத்து உறுப்பினா்களின்ஆதரவுடன் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கொண்டசமுத்திரம், பலமநோ் சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே போக்குவரத்து சிரமத்தை தவிா்க்கும் வகையில், சிலையின் பீடத்தை உயா்த்தி அமைத்து சாலையை விஸ்தீரணம் செய்து, போக்குவரத்தை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பல்வேறு நிறுவனங்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி ரூ.14 லட்சத்தை தள்ளுபடி செய்யும் தீா்மானத்தை எதிா்த்து, உறுப்பினா் என்.கோவிந்தராஜ் பேசினாா். அதற்கு தலைவா், அதிகாரிகள், உறுப்பினா்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தீா்மானக்கப்பட்டது.

கூட்ட இறுதியில், நகராட்சியில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற சத்துணவு சமையலா் உதவியாளா் பணிக்கு தோ்வு பெற்ற 8 பேருக்கு தலைவா் செளந்தரராஜன் பணி ஆணைகளை வழங்கினாா்.