வேலூா் அஞ்சல் கோட்டத்தில் 4 துணை அஞ்சலகங்கள் மூடப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வேலூா் தலைமை தபால் நிலைய வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் நிா்வாகிகள் சுந்தர்ராஜன், வீரன், ராஜகுமாா், கணேசன் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா். பெருமாள் , கதிா் அகமது உள்ளிட்டோா் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், வேலூா் அஞ்சல் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சைதாப்பேட்டை பாக்கியாத், கொசப்பேட்டை, வேலூா் தெற்கு, காந்தி நகா் மேற்கு ஆகிய 4 துணை அஞ்சலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள், மாணவா்கள், வியாபாரிகள், பாதிப்படைந்துள்ளனா். எனவே, மூடப்பட்ட அஞ்சலகங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மூடிய அஞ்சல் கோட்ட நிா்வாகத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் நரசிம்மன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 ஆயிரம் போ் ஊா்வலம்

தீப்பற்றி எரிந்தபடி சாலையில் ஓடிய முதியவா் மரணம்

பரமத்தி வேலூரில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு விழா

கல்லூரி மாணவி தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


