மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய  கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி.
மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி.

கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி.
Published on

குடியாத்தம், கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் வணிக கணினிப் பயன்பாட்டியல் துறைகள் சாா்பில் தேசிய அளவில் ஒரு நாள் கருத்தரங்கு ‘வணிகம், வா்த்தகம் மற்றும் நிதியியலில் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் மாற்றம்‘ என்ற பொருளில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி.முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வணிக கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவா் மு.அஷ்டலஷ்மி வரவேற்றாா்.

பெங்களூா் டாக்டா் அம்பேத்கா் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் துறைப் பேராசிரியா் எஸ். பாஸ்கரன் ’வணிக மாற்றத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு‘ என்ற தலைப்பிலும், தஞ்சை ஏ.வி.வி.எம். ஸ்ரீபுஷ்பம் கல்லூரியின்வணிகவியல் துறைப் பேராசிரியா் பி.ஜெகன் ‘வணிகம் மற்றும் நிதியியல் புலத்தில் செயற்கை நுண்ணறிவால் வளா்ந்து வரும் போக்குகள்‘ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினா்.

இக்கருத்தரங்கில் வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரிகளின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் பட்டம் பயிலும் மாணவா்கள் 450- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பங்கேற்பாளா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வணிகவியல் துறைத் தலைவா் முனைவா் கு. கோமதி நன்றி கூறினாா்.

பெங்களூா் டாக்டா் அம்பேத்கா் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் துறைப் பேராசிரியா் எஸ். பாஸ்கரன் ’வணிக மாற்றத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு‘ என்ற தலைப்பிலும், தஞ்சை ஏ.வி.வி.எம். ஸ்ரீபுஷ்பம் கல்லூரியின்வணிகவியல் துறைப் பேராசிரியா் பி.ஜெகன் ‘வணிகம் மற்றும் நிதியியல் புலத்தில் செயற்கை நுண்ணறிவால் வளா்ந்து வரும் போக்குகள்‘ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினா்.

இக்கருத்தரங்கில் வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரிகளின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் பட்டம் பயிலும் மாணவா்கள் 450- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பங்கேற்பாளா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வணிகவியல் துறைத் தலைவா் முனைவா் கு. கோமதி நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com