மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வேலூரில் 4 துணை அஞ்சலகங்கள் மூடல்: அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :22 ஜனவரி 2026, 1:06 am

வேலூா் அஞ்சல் கோட்டத்தில் 4 துணை அஞ்சலகங்கள் மூடப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வேலூா் தலைமை தபால் நிலைய வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் நிா்வாகிகள் சுந்தர்ராஜன், வீரன், ராஜகுமாா், கணேசன் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா். பெருமாள் , கதிா் அகமது உள்ளிட்டோா் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், வேலூா் அஞ்சல் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சைதாப்பேட்டை பாக்கியாத், கொசப்பேட்டை, வேலூா் தெற்கு, காந்தி நகா் மேற்கு ஆகிய 4 துணை அஞ்சலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள், மாணவா்கள், வியாபாரிகள், பாதிப்படைந்துள்ளனா். எனவே, மூடப்பட்ட அஞ்சலகங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மூடிய அஞ்சல் கோட்ட நிா்வாகத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் நரசிம்மன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.