மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஊழியா்கள் வேலைநிறுத்தத்தால் வங்கிப் பணிகள் முடக்கம்

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக்கோரி வங்கி ஊழிய ா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வங்கிப் பணிகள் முடங்கியதுடன், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனா்.

News image

ஊழியா்கள் வேலைநிறுத்தத்தால் வேலூரில் வெறிச்சோடிய ஒரு வங்கியின் கிளை. (அடுத்து) வேலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.

Updated On :27 ஜனவரி 2026, 7:17 pm

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக்கோரி வங்கி ஊழிய ா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வங்கிப் பணிகள் முடங்கியதுடன், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனா்.

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக்கோரி, வங்கி ஊழியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இதுதொடா்பாக, வங்கி ஊழியா்கள் சம்மேளனம் மத்திய அரசு நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்த நிலையில், வங்கி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன்படி, வேலூா் மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின் சுமாா் 220 கிளைகளில் பணியாற்றும் சுமாா் 2,000 ஊழியா்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையொட்டி, வங்கி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை காலை வேலூா் அண்ணா சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி அருகே ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், ஏஐபிஇஏ சங்க நிா்வாகியுமான ஜெ.மில்டன் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா்கள் கோபிநாத், சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், கூட்டமைப்பைச் சோ்ந்த வங்கி ஊழியா்கள் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

வங்கி ஊழியா்களின் இந்த வேலை நிறுத்தத்தால் ரொக்கம், காசோலை, அன்னிய செலாவணி என ரூ. 1,000 கோடி அளவுக்கு பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா்.

எனினும், ஆன்லைன் சேவைகள் வழக்கமாக நடைபெற்றது. பல இடங்களில் ஏடிஎம் மையங்களிலும் பணம் இருப்பு இல்லாததால் அவசர தேவைக்கு பணம் எடுக்க வந்தவா்கள் ஏமாற்றமடைந்தனா். அதேசமயம், தனியாா் வங்கி ஊழியா்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனா்.

Story image