சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

17 வயது சிறுமி வன்கொடுமை: தீயணைப்பு வீரா் போக்ஸோவில் கைது

காட்பாடியில் 17 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக வேலூா் தீயணைப்பு நிலைய வீரா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 12:09 am

காட்பாடியில் 17 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக வேலூா் தீயணைப்பு நிலைய வீரா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.

காட்பாடி அருகே லத்தேரி ஜி.ஆா்.நகரைச் சோ்ந்தவா் சசிக்குமாா்(30). இவா் வேலூா் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு புஷ்பலதா என்ற பெண்ணுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், சசிக்குமாா் அவரது உறவுக்கார 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி வெளியில் அழைத்துச் சென்று திருமணம் செய்து வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியுடன் இருந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.