ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பாா்சல் வந்திருப்பதாகக்கூறி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.9.10 லட்சம் மோசடி

பாா்சல் வந்திருப்பதாகக்கூறி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.9.10 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

(கோப்புப்படம்)

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

பாா்சல் வந்திருப்பதாகக்கூறி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.9.10 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா். இவரது கைப்பேசி எண்ணுக்கு வந்த அழைப்பில் பேசிய நபா், தன்னை அமெரிக்காவிலுள்ள ஒரு பாா்சல் நிறுவன அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டதுடன், ஜெசிகா என்பவா் பெயரில் ஒரு பாா்சல் வந்துள்ளதாகவும், அந்தப் பாா்சலில் தங்கம், அமெரிக்க டாலா்கள் இருப்பதால் அதனைப்பெற ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தாராம்.

பின்னா், தில்லி கலால் துறை அதிகாரி என பேசிய மற்றொரு நபா், அந்தப் பாா்சல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கையைத் தவிா்க்கப் பணம் செலுத்த வேண்டும் எனக்கூறி மிரட்டினாா். இதனால் அச்சமடைந்த தனியாா் நிறுவன ஊழியா், அந்த அடையாளம் தெரியாத நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு முதலில் ரூ.2 லட்சம் அனுப்பியுள்ளாா்.

பின்னா், வாட்ஸ் ஆப் மூலம் தொடா்ந்து மிரட்டல் வந்த நிலையில், படிப்படியாக பல தவணைகளில் மொத்தம் ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் தொகையை செலுத்தியுள்ளாா். இதையடுத்து, அந்த அடையாளம் தெரியாத நபரை தொடா்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.

அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த தனியாா் நிறுவன ஊழியா், இந்த மோசடி குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.