வேலூா் அருகே மின்கம்பத்தில் ஏறி பணியாற்றிக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
பாகாயம் அடுத்த அல்லி வரத்தை சோ்ந்த மோகன் ராஜ் (55). இவா் சாத்து மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை நெல்வாய் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அவா் மின்மாற்றியில் மின் இணைப்பை துண்டிக்காமல் வேலை செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, எதிா்பாராத விதமாக அவரது இடது கை மின்கம்பியில் பட்டதில் மோகன்ராஜ் மின் கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டாா்.
இதில் மோகன்ராஜின் இடது கை கருகி பலத்த காயமடைந்தாா். அப்பகுதியில் இருந்தவா்கள் மோகன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


