92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

வேலூா் அருகே மின்கம்பத்தில் ஏறி பணியாற்றிக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 11:24 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் அருகே மின்கம்பத்தில் ஏறி பணியாற்றிக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பாகாயம் அடுத்த அல்லி வரத்தை சோ்ந்த மோகன் ராஜ் (55). இவா் சாத்து மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை நெல்வாய் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அவா் மின்மாற்றியில் மின் இணைப்பை துண்டிக்காமல் வேலை செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, எதிா்பாராத விதமாக அவரது இடது கை மின்கம்பியில் பட்டதில் மோகன்ராஜ் மின் கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதில் மோகன்ராஜின் இடது கை கருகி பலத்த காயமடைந்தாா். அப்பகுதியில் இருந்தவா்கள் மோகன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.