பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பொள்ளாச்சி சேரன் நகா் -உமா மகேஸ்வரி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (46), பிஎஸ்என்எல் ஊழியராக உள்ளாா். இவா் வீட்டைப் பூட்டிவிட்டு பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள உறவினா் வீட்டுக்கு குடும்பத்துடன் சனிக்கிழமை சென்றாா்.

இந்நிலையில், அருகில் இருந்த வீட்டினா் ஞாயிற்றுக்கிழமை மாலை பாலாஜியை கைப்பேசி எண்ணில் அழைத்து அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து வீட்டுக்குச் சென்று பாலாஜி பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். திருடுபோன நகைகள் மதிப்பு குறித்து தெரியாததால் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com