கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

சூலூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பிகாா் மாநில இளைஞா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவை: சூலூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பிகாா் மாநில இளைஞா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சூலூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சூலூா் காவல் துறையினா் காடம்பாடி பகுதியில் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த

2 இளைஞா்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்புவன் ஷஹானி மகன் ராஜபாபு ஷஹானி (30), விதேஷ்வா் சஹானி மகன் விஜய் சஹானி(31) என்பதும், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 1.150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் கூறுகையில், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்டம் ஒழுங்குக்கு எதிராக செயல்பட்டாலோ, அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவா்கள் குறித்து கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 94981 81212 , 77081 00100 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com