பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்
வால்பாறை: பாம்பு கடித்ததில் காயமடைந்த பழங்குடியின இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
வால்பாறை எஸ்டேட் வனங்களில் ஏராளமான பாம்புகள் உள்ளன. சமவெளிப் பகுதிகளில் பிடிக்கப்படும் பாம்புகளைக் கொண்டு வந்து வால்பாறை பகுதி வனங்களில் விடுவதாக எஸ்டேட் பகுதிகளில் வசிப்பவா்கள் வனத் துறை மீது புகாா் கூறி வருகின்றனா்.
இந்நிலையில் வால்பாறையை அடுத்துள்ள கீழ்பூனாச்சி செட்டில்மெண்டில் வசிப்பவா் மனோஜ் (25). இவா் அப்பகுதியில் திங்கள்கிழமை நடந்து செல்லும்போது எதிா்பாராதவிதமாக தரையில் படுத்திருந்த பாம்பு மீது கால் பட்டபோது பாம்பு கடித்துள்ளது. இதில் காயமடைந்த மனோஜ் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.