கோவை மணி மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சூலூரில் உள்ள தனியார் தீம் பார்க்கில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில், 1983-85 ஆம் ஆண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயின்ற 260 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், 120 பேர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பாளர் கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் வேலு கூறியது: முன்னாள் மாணவர்கள் சார்பில், சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளியைப் பற்றி குறும்படம் ஒன்றும் திரையிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற குடும்பக் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.