இஸ்கான் கோயிலில் இளைஞர்களுக்கான இசை நிகழ்ச்சி

கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் இளைஞர்களுக்கான இசை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் இளைஞர்களுக்கான இசை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை, கொடிசியா அருகே உள்ள இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் மும்பையைச் சேர்ந்த 'மாதவாஸ் ராக் பேண்ட்' குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், உலகெங்கும் மது, செல்லிடப்பேசி, சமூக வலைத்தளங்களின் மூலமாகத் தவறான வழிகளில் செல்லும் இளைஞர்களை நல்வழிப்படுத்த இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில், இஸ்கான் மண்டலச் செயலாளர் பக்தி வினோத சுவாமி மகராஜ், இன்றைய இளைஞர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்கள் அதிலிருந்து மீண்டு வந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும் வழி முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com