கோவை அருகே, கவுண்டம்பாளையத்தில் உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியின் 10-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரியின் செயலர் சி.ஏ.வாசுகி தலைமை வகித்தார். முதல்வர் (பொறுப்பு) வே.பாலசுப்பிரமணியம் விழாவைத் தொடக்கிவைத்தார்.
சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆ.கணபதி பங்கேற்று 892 பேருக்கு இளங்கலைப் பட்டங்களையும், 236 பேருக்கு முதுகலைப் பட்டங்களையும் வழங்கினார். விழாவில், மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.