கோயம்புத்தூர்
வழிப்பறி கொள்ளையர்கள் கைது
சூலூர் அருகே ராவத்தூரில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சின்ன வாய்க்கால் பகுதியில் நடந்து சென்ற
வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் திங்கள்கிழமை கைது செய்யப்படனர்.
சூலூர் அருகே ராவத்தூரில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சின்ன வாய்க்கால் பகுதியில் நடந்து சென்ற மகேஷ்வரனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, செல்லிடப்பேசியைப் பறித்த வழக்கு தொடர்பாக போத்தனூரை சேர்ந்த தவசுதின்(25), கன்னியாகுமரியைச் சேர்ந்த
சுபின்(23), சுந்தராபுரத்தைச் சேர்ந்த இம்ரான் (37) ஆகியோரை சூலூர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இந்த மூவரும் சில மாதங்களுக்கு முன் வசந்தி என்பவரிடம் 5 பவுன் சங்கிலியைப் வழிப்பறி செய்த வழக்கிலும் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.