ஆனைகட்டி அருகே காட்டுக்குள் ஆண் சடலம்

சின்னத் தடாகத்தை அடுத்த மலையடிவார கிராமமான 24.வீரபாண்டி பகுதியில் முள்புதரில் முதியவர் சடலம் கிடப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சின்னத் தடாகத்தை அடுத்த மலையடிவார கிராமமான 24.வீரபாண்டி பகுதியில் முள்புதரில் முதியவர் சடலம் கிடப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது.
ஆனைகட்டி, கொண்டனூரைச் சேர்ந்தவர் குமரன் (38). இவர் அளித்த தகவலின்பேரில், போலீஸார் 24.வீரபாண்டி கிராமத்தில் முள்புதரில் கிடந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதி, யானைகள் நடமாடும் இடம் என்பதால் முதியவர் யானை தாக்கி உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டுக் கிடந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com