சூலூர் அருகே லாரி மோதிய விபத்தில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
ராமநாதபுரத்தில் வசிக்கும் ராஜா மகன் கலைக்குமார்(32). இவர் ராவத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சிந்தாமணிப்புதூர் அருகே அதே திசையில் அதிவேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கலைக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.