கோவை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 27- ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கூட்டரங்கில் ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் புதன்கிழமை (செப்டம்பர் 27) நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்னைகளுக்கு மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.