வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் 3 பெண் தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வால்பாறையை அடுத்த ஆனைமுடி எஸ்டேட்டில் திங்கள்கிழமை காலை தேயிலை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அருகில் உள்ள வனப் பகுதிக்குள் இருந்து திடீரென ஓடிவந்த காட்டெருமை தொழிலாளர்களர்கள் நோக்கிச் சென்றது. இதைப் பார்த்த தொழிலாளர்கள் பலரும் அலறிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். ஆனால்,
அங்கிருந்து ஓட முடியாமல் தவித்த ஞானம்பாள் (57), மகாலட்சுமி (55), நெபிசா (51) ஆகிய மூன்று தொழிலாளர்களை காட்டெருமை முட்டி தள்ளியது. இதில், காயமடைந்த மூன்று பேரும் முடீஸ் குழும மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை வனத் துறையினர், அதிமுக தொழிற்சங்கத் தலைவர் வி.அமீது ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.