பாஜக நிர்வாகிக்கு கத்திக்குத்து

கோவையில் பாஜக மண்டல பொதுச்செயலர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவையில் பாஜக மண்டல பொதுச்செயலர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 கோவை, வடவள்ளி அருகேயுள்ள வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமி. இவர் அப்பகுதியின் பாஜக மண்டல பொதுச் செயலராக உள்ளார். இவர் அதே பகுதியில் சங்கீதா என்பவருக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் பாத்திரக் கடை நடத்தி வந்துள்ளார். இவர், கடைக்கு பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
   இந்நிலையில், வாடகையைக் கொடுக்காததால் கடையைக் காலி  செய்ய தனது ஆள்களுடன் சங்கீதா ஞாயிற்றுக்கிழமை இரவு கடைக்குச் சென்றுள்ளார். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, சங்கீதாவுடன் வந்த நபர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் சாமியைக் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் சாமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
 இது குறித்து வடவள்ளி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com