குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.
கோவை, சங்கனூர் பாலாஜி நகர் இரண்டாவது வீதியைச் சேர்ந்தவர் சிவா என்கிற சிவபிரகாஷ் (30). இவர், சங்கனூர் பகுதியைச் சேர்ந்த பிரவீண் என்பவரை கடந்த நம்பவர் 5 ஆம் தேதி கொலை செய்த வழக்கில் சரவணம்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் மீது பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனவே, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை ஆணையர் பாலாஜி சரவணன், கிழக்குப் பகுதி உதவி ஆணையர் சுரேஷ் ஆகியோர் மாநகர காவல் ஆணையர் சுமித் சரணுக்குப் பரிந்துரை செய்தனர். அவர்களின் பரிந்துரையை ஏற்று சிவாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com