கோவை மாவட்டம், வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி சனிக்கிழமை உயிரிழந்தது.
வால்பாறை நகர் பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடுவதாகப் பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை, வாழைத் தோட்டம் பகுதிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வந்த சிறுத்தை, மீனா என்பவருக்குச் சொந்தமான 2 வயது கன்றுக் குட்டியை கடித்துக் கொன்று, அதன் உடலை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் போட்டுச் சென்றது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.