கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த 4 காவல் உதவி ஆய்வாளர்கள் நீலகிரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த வி.நாகராஜ், செட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிராங்கிளின், பெரியநாயக்கன்பாளையம் உதவி ஆய்வாளர் எம்.மியான்டிட் மனோ, மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பி. ஜவகர்குமார் ஆகியோர் நீலகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்து கோவை சரக டிஐஜி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.