கோவையை அடுத்த போத்தனூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 12 பவுன் நகையை சனிக்கிழமை பறித்துச் சென்றனர்.
கோவை, சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி பிரியாங்கா (22). இவர் சனிக்கிழமை காலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பிரியாங்காவின் கழுத்தில் இருந்த 12 பவுன் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து போத்தனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.