கோயம்புத்தூர்
மர்மக் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்பு
வடவள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட முகாசிசெம்சம்பட்டியில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
வடவள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட முகாசிசெம்சம்பட்டியில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
முகாசிசெம்சம்பட்டியில் கடந்த 20 நாள்களாக 30க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சல் மற்றும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து ஒரு சிலர் பொகளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர்கள் சிக்குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் காய்ச்சல் பரவியுள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.