விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காத வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
கோவை, பெரியகடைவீதியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காத வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகின்றது. பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கதக்கது. தமிழிசைக்கு ஏற்பட்டதுபோல அரசியல் கட்சியினர் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் சோபியா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஸ்டாலின் ஆதாரம் இல்லாமல் பொதுவாகப் பேசி வருகிறார். குற்றம் சொல்வது திமுகவின் வாடிக்கையாகும் என்றார்.