பி.எஸ்.ஜி. அறநிலைய மாணவர் இல்லத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி. அறநிலைய மாணவர் இல்லத்தில் 2018-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

கோவை பி.எஸ்.ஜி. அறநிலைய மாணவர் இல்லத்தில் 2018-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
அதன்படி, பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ இல்லாத 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை மற்றும் 11-ஆம் வகுப்பில் தமிழ் வழியில் கற்க விரும்பும் நலிவுள்ள மாணவர்கள் பி.எஸ்.ஜி. அறநிலைய மாணவர் இல்லத்தில் சேரலாம்.
அவர்களுக்கு உணவு, தங்குமிடம், சீருடை, மருத்துவ வசதி, எழுது பொருள்கள், கணினிப் பயிற்சி , விளையாட்டுப் பயிற்சி என கல்லூரி படிப்பு முடியும் வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மாணவர் விடுதியில் சேர விரும்புபவர்கள் பள்ளியின் செயலர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து ஏப்ரல் 28-ஆம் தேதி மாலைக்குள் வழங்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
மேலும், இது குறித்த விவரங்களுக்கு பூ.சா.கோ. சர்வஜன மேல்நிலைப் பள்ளிச் செயலர் அலுவலகத்தை நேரிலோ, 0422- 2572310, 99448 65628 எனும் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com