கோயம்புத்தூர்
எஸ்.ஆர்.எஸ்.ஐ. பள்ளி மாணவர்கள் 97 சதவீதம் தேர்ச்சி
காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர்.
காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர். இதில் 129 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 97 சதவீத தேர்ச்சியாகும்.
இதில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 25 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
கணக்குப் பதிவியல் பாடத்தில் 2 பேர், பொது இயந்திரவியல் பிரிவில் 2 பேர், கணிப்பொறியியலில் ஒருவர் என மொத்தம் 5 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இவர்களை பள்ளி தாளாளர் வி.ராமகிருஷ்ணன், செயலாளர் எஸ்.ஜெயக்கண்ணன், முதல்வர் டி.லூசி தங்கராணி, ஒருங்கிணைப்பாளர் பி.மூர்த்தி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.