கோயம்புத்தூர்
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை, திம்மராயம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் உண்டியலை
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை, திம்மராயம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திம்மராயம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு இலுப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் பூசாரியாக இருந்து வருகிறார். இவர், சனிக்கிழமை கோயில் நடையை மூடிவிட்டு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை கோயிலை திறக்க வந்தார். அப்போது கோயிலின் உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு சுமார் ரூ. 8 ஆயிரம் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது.
தகவலறிந்த சிறுமுகை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.