வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள், தோட்ட அதிகாரியின் வீடு, பொருள்களை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள், தோட்ட அதிகாரியின் வீடு, பொருள்களை சேதப்படுத்தின.
வால்பாறையை அடுத்த ஊசிமலை எஸ்டேட் தோட்ட அதிகாரியாக பணியாற்றுபவர் பாலாஜி. இவர் ஆடிப் பெருக்கு விடுமுறையையொட்டி வெளியூருக்கு சென்றிருந்தார்.
 இந்நிலையில் ஊசிமலை எஸ்டேட் பகுதிக்கு  சனிக்கிழமை இரவு வந்த யானைக் கூட்டம் பாலாஜி வீட்டின் கதவு, ஜன்னல்களை முட்டி தள்ளின. மேலும் வீட்டில் இருந்த பொருள்களை வெளியே எடுத்தெறிந்து சேதப்படுத்தின.
 இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினர் அப்பகுதிக்கு சென்று நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com