கோயம்புத்தூர்
கனரா வங்கி சார்பில் வழிகாட்டு முகாம்
கனரா வங்கியின் கூடலூர் கவுண்டம்பாளையம் கிளை சார்பில் சிறு மற்றும் குறுந் தொழில் முனைவோர் கடன்
கனரா வங்கியின் கூடலூர் கவுண்டம்பாளையம் கிளை சார்பில் சிறு மற்றும் குறுந் தொழில் முனைவோர் கடன் பெறுவதற்கான வழிகாட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வங்கிக் கிளை முதன்மை மேலாளர் கிரிதரன் வரவேற்றார். வங்கியின் கோவை மண்டல துணைப் பொதுமேலாளர் ஆர்.சக்ரவர்த்தி தலைமை வகித்து பொதுத் துறை வங்கிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கடன் பெறும் முறை, ஜி.எஸ்.டி. சார்ந்த கடன்கள், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்காக வழங்கப்படும் கடன்கள் குறித்து விரிவாக விளக்கினார்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட சிறு குறு தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கமளித்தார். கனரா வங்கி மேலாளர் அசோகன் நன்றி கூறினார். முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.