ஆட்டோ மோதியதில்  தொழிலாளி சாவு

கோவில்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய  விபத்தில் சமையல் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

கோவில்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய  விபத்தில் சமையல் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
  கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (40). சமையல் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 24-ஆம் தேதி கீரணத்தம் ஐ.டி. பார்க் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
 அப்போது எதிரே வந்த ஆட்டோ ராஜ்குமார் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com