வால்பாறை: கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வந்த தகவலையடுத்து வால்பாறை மலைப் பாதையில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை அறிக்கையில் கூறப்பட்டது. வால்பாறை பகுதியில் மழை பெய்தால் மலைப் பாதைகளில் மண் சரிவு மற்றும் மரம் விழுந்து பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.
இதனிடையே கனமழை பெய்யும் என்று கூறப்படுதால் வால்பாறை- பொள்ளாச்சி இடையே உள்ள மலைப் பாதை கொண்டை ஊசி வளைவுகளில் மெதுவாகவும், பாதுகாப்பாகவும் வாகனங்கள் இயக்க வாகன ஓட்டிகளுக்கு ஆழியாறு பகுதியில் வனத் துறையினா் அறிவுறுத்தி அனுப்பிவைத்தனா்.