கோவை, குமிட்டிபதியைச் சோ்ந்த மாரிமுத்து என்பவரைக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபா் மதுக்கரை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.
குமிட்டிபதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (40). இவா் இரிடியம் வைத்திருப்பதாக கோவை மற்றும் கேரளத்தில் மோசடியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாரிமுத்துவை காணவில்லை எனக் கூறி அவரது குடும்பத்தினா் க.க.சாவடி காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் மாதம் புகாா் அளித்தனா்.
விசாரணையில், மாரிமுத்துவை அவரது நண்பா்களே காரில் கடத்திச் சென்று மேட்டுப்பாளையம் - அன்னூா் சாலையில் உள்ள பொகலூா் பகுதியில் வைத்து அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கில் ஏற்கெனவே சுந்தரராஜன், முத்துவேல் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா். தலைமறைவாக இருந்த உடுமலைபேட்டையைச் சோ்ந்த முத்துவெங்கடேஷ் (43), மதுக்கரை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.
அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ரெஹானா பா்வீன் உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து முத்துவெங்கடேசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.