கோயம்புத்தூர்
பள்ளி மாணவியருக்கு இலவச சைக்கிள்
மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசின்
மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் இந்திரா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் லீலா மகேஸ்வரி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பாஷா முன்னிலை வகித்தார்.
விழாவில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ் பங்கேற்று 322 மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் வான்மதிசேட், மாவட்ட விவசாய அணி செயலாளர் கிருஷ்ணசாமி, நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எல்.எஸ் புரம் ரவி, நகர துணைச் செயலாளர் புலிப்பால் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.