சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி சேவா பாரதி தென்தமிழ்நாடு மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஆகியவை சார்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அரசு தலைமை மருத்துவர் சேரலாதன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். ரத்த வங்கி மருத்துவர் லட்சுமணகுமார், சேவா பாரதி கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட தலைவர் சுப்புராஜ், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.