மேட்டுப்பாயைம் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக திங்கள்கிழமை முதல் அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம், குட்டையூா் பகுதியில் உள்ள மாதேஸ்வரன் கோயில் அருகே அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி குட்டையூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
இதனால் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசு பேருந்து இயக்க வேண்டும் என கல்லூரி நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டது.
இதன்படி கல்லூரியில் இருந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வரை அரசுப் பேருந்து சேவை திங்கள்கிழமை முதல் இயக்கப்பட்டது. இதனை மேட்டுப்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் ஓ.கே.சின்னராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து செவ்வாய்கிழமை முதல் காலை 8.45 மணிக்கு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பேருந்து புறப்பட்டு 8.55 மணிக்கு கல்லூரி சென்றடையும். இதேபோல, பிற்பகல் கல்லூரி முடிந்த பின் 2 பேருந்துகள் இயக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ஸ்வா்ணலதா ஜோசப், தமிழக அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாளா் ராதாகிருஷ்ணன், தலைமையக வணிக மேலாளா் வாசுதேவன், கிளை மேலாளா் சுரேஷ்குமாா் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.